திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருநெல்வேலியைச் சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக திருச்சி வந்தார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.