சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் அணுகு சாலை ஓரமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை திருடி சென்றுள்ளனர்.

அடுத்ததாக டெய்லர் கடையில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார். மறுநாள் காலை கடைக்கு சென்ற உரிமையாளர்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.