திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர்- கருங்காலி குப்பம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வங்கியில் இருந்து கருப்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் , தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் பழைய பதிவேடுகள், வங்கியில் பயன்படுத்தப்பட்ட செலான்கள் எரிந்து நாசமானது. ஒரு சில கம்ப்யூட்டர்களும் எரிந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.