திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்மநேரியில் செந்தூர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கணபதி ராமன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  சுடலைக்கண்ணு, பிச்சையா, வானமாமலை, இசக்கிமுத்து உள்பட 9  பேர் செந்தூரிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

இதனை தட்டிக் கேட்ட கணபதி ராமனையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.