தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்து சென்றது. மறு மார்கத்தில் சுமை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரியும், பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து டிரைவர் சரவணன்சிவசக்தி உள்ளிட்ட 6 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.