திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோமூர் கிராமத்தில் பாலு-லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை லாவண்யா தான் வளர்க்கும் மாடுகளை பிடித்துக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் லாவண்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து லாவண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.