மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 சிறுமியிடம் தன்னிடம் பழகுமாறு தொந்தரவு அளித்தார். மேலும் நீ என்னிடம் பேசவில்லை என்றால் கையை பிளேயாடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என மருதன் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சத்தில் சிறுமி பேசிய பிறகு மருதன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மருதனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மருதனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.