கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபினேஷ், ரதீஷ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். நேற்று நண்பர்கள் மூன்று பேரும் ஞாறான்விளை ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி அமர்ந்து மது குடித்தனர். அப்போது போதையில் இருந்த தினேஷ் பயணிகள் ரயில் நோக்கி சென்றார்.

அப்போது அபிநேஷும், ரகீஷும் ஓடி சென்று அவரது கையை பிடித்து இழுத்தனர். அதற்குள் ரயில் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக அபினேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் தினேஷுக்கும், ரதிஷுக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.