கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சித்தன்ன பள்ளியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனது பேரனுடன்  நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஓசூரைச் சேர்ந்த சிவா ரெட்டி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த தங்க நகையை மீட்டனர்.