ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பபத்தி வெள்ளாளபாளையம் பகுதியில் சொக்காயம்மாள்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக சொக்காயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சொக்காயம்மாள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர்  கருகிய நிலையில் கிடந்த சொக்காயம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சொக்காயம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.