கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் விஜயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் விஜயன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.