நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நானும் இதுபோன்ற செய்திகளை கேள்விப்படுகிறேன்.

ஆனால், அது உண்மையில்லை. குழந்தைகளின் படிப்பு, எங்களின் படங்கள் என பிஸியாக இருக்கிறோமே தவிர நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கு வேறு காரணங்கள் இல்லை” எனக் கூறினார்.