ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் குளக்கரை தெருவில் முனியப்பன்- ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தீபக்(12), ரூபன்(7) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த முனியப்பன் தனது இரண்டு மகன்களையும் கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மூத்த மகன் தீபக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இளைய மகன் ரூபன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முனியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முனியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.