தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இந்திராணி, அவரது மகள்கள் சுஷ்மிதா, சுருதி அயோரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

மொத்தம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து இந்திராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.