திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூரில் திமுக பிரமுகரான சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் சம்பத்குமார் அந்த பகுதியில் நடை பயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணிக்கு ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் இருக்கும் சிவன் கோவிலை சுற்றி நடை பயணம் சென்றார். அப்போது மழை பெய்ததால் இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார்.

அதே நேரத்தில் அங்கு தொங்கிக் கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்திருந்தது. இதனை அறியாமல் சம்பத்குமார் மின்வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சம்பத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.