காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லர் நகர்- அசோக் நகர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் ஏராளமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல தேங்கி கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சுரங்க பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க ரயில்வே நிர்வாகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.