திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் தாயாத்தாள். இவர் கடந்து சில வருடங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயாத்தாள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவரை கணவர் பழனிச்சாமி தேடி உள்ளார். இந்நிலையில் ஒரு தோட்டத்தின் கிணற்றில் இருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்று பார்த்த பழனிசாமி அது தனது மனைவி தாயாத்தாள் தான் என்பதை உறுதி செய்தார். அவர் உடல் நலக் கோளாறால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.