தேனி மாவட்டம் கம்பம் குமுளி – தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தியின் உருவ சிலை உள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் பல்வேறு அமைப்பினர் மகாத்மா காந்தியின் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கம்பம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் கிடைக்குமா என்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.