திருவண்ணாமலையில் அமைந்துள்ள கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திருவண்ணாமலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கன்னி கோவில் அருகே ஒரு கடையிலும் பெரியார் சிலை அருகே மற்றும் ஒரு கடையிலும் புயலைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.