கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும் ஏழைகள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதாகவும், ஏழ்மையைக் கண்டவரால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.