டெல்லி துக்ளாபாத் பகுதியைச் சேர்ந்த பறக்கும் படையினர், நேற்று இரவு ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சொகுசு காரான BMW ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சோதனை செய்தனர்.

அப்போது, 2 பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் இருந்த இருவரிடம் விசாரித்ததில் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.