நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மத்திய அரசைச் சாடியதுடன், போராடும் இளைஞர்களுக்குத் தமது நெகிழ்ச்சியான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

சினிமா இயக்குநர்களைக் காட்டிலும் அரசியல் முதிர்ச்சியுடன் அமைச்சர் செயல்பட்டுள்ளதாகப் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வை ஒழிப்பதற்காகத் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் வீதிக்கு வந்து போராடி வரும் அனைத்து மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அமைச்சர் ராஜ்மோகன் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கினார். நீட் முறையைச் செங்கல்லாகக் கூட நாட்டில் இல்லாதவாறு ஒட்டுமொத்தமாக ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவுமாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கல்வியைக் கொண்டுவர அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் எந்தவொரு மாணவனுக்கும் அல்லது இளைஞருக்கும் காவல்துறை தரப்பிலிருந்து எவ்வித அச்சுறுத்தல்களும் கொடுக்கப்படக் கூடாது என்று அவர் கடுமையாகக் கேட்டுக் கொண்டார்.

“>

 

எதற்கும் எப்போதுமே செவிமடுக்காத செவிடன் காதில் ஊதியது போல் இருந்த டெல்லி அரசை, மாணவர்களின் அதிரடிப் போராட்டம்தான் தற்போது செவிசாய்க்க வைத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், அந்த உறுதியான மாணவர்களின் அடிபணிந்து அவர்களுக்குத் தலைவணங்குவதாக உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார்.