மதுரையில் புதியதாக பள்ளியில் சேர்ந்த 4 வயது மகளை அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று பெற்றோர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர்கள் அடிக்கின்றனர் என சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வானது அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தவிர்த்து வருகின்றனர் என்றே சொல்லலாம்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சங்கரபாண்டியன்-தமிழரசி தம்பதியினர். இந்த தம்பதியினர் தங்களது மகளை பள்ளிக்கு சேர்க்க சென்றுள்ளனர். அப்போது தம்பதியினர் தன் 4 வயது மகளை பள்ளியில் சேர்த்துவிட்டு, அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்ற உறுதிமொழி கடிதத்தை அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்த தம்பதியினர் 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர்.