மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டி இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இது தொடர்பாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி, இந்நிகழ்வு ஒரே இந்தியா உன்னத இந்தியா என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது என கூறியிருந்தார். ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல் தானா…?” என கேள்வி எழுப்பி உள்ளார்.