கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஜெயானந்தம்(77) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஸ்டோர் பொறுப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெயானந்தம் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் விசுவாசபுரத்தில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் வெள்ளமடம் அரசு பள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஜெயானந்தம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயானந்தம் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயானந்தத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைப்பற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.