ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் விவசாயியான பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பாஷா வீட்டிற்கு முன்பு ஆடுகளை கட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சிறுத்தை புலி ஆட்டை கடித்திருக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால் அது எந்த மர்ம விலங்கு என்பது தெரியவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.