தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் ரங்கம்மாள்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி துணி துவைப்பதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாறை வழுக்கி மூதாட்டி ஆற்றல் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.