கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மது குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2 மது பாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலை திறக்க முயன்ற போது மது பாட்டிலுக்குள் பூரான் இருந்ததை கண்டு விஜயனும், அவரது நண்பரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விற்பனையாளரிடம் கேட்டபோது பூரான் சீனாவில் முக்கியமான உணவு பொருள் என்பதால் இதனை பெரிதாக நினைக்க வேண்டாம் என அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த மது பாட்டிலை பறித்துக் கொண்டு வேறு ஒரு மது பாட்டில் கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.