கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பில் அனீஸ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு சிந்துஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குமாரை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.