சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகரப் போக்குவரத்திற்கு சொந்தமான காலி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கிய 30 வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் நேற்று இரவு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 2 தனியார் சொகுசு பேருந்துகள், ஒரு லாரி, ஒரு ஆட்டோ, இரண்டு கார்கள் உட்பட 9 வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.