சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக்கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று அதிகாலை வணிக வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வணிக வளாகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து அதிகாலை நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.