மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைச் சட்டத்திற்குத் தமிழகத்தில் இருந்து யார் ஆதரவு கரம் நீட்டினாலும், அது மாநிலத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

அத்தகையவர்களை வரலாறு என்றென்றும் ’21ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள்’ என்றே முத்திரை குத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்களின் உரிமைகளையும் அரசியல் பலத்தையும் பறிக்கும் வகையிலான தொகுதி சீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றன.

இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பலியிடுவதாகக் கருதப்படும் என்று ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பதிவு மூலமாகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“>

 

இந்த விவகாரம் தற்போது தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.