கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சந்திரா என்பவர் அரசு பேருந்தில் பூ மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து பூ மார்க்கெட் அடைந்தவுடன் தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து  சென்று விசாரணை நடத்திய போது, தங்க சங்கிலி திருடியதை அந்த பெண் ஒப்புக்கொண்டார். அவர் பழனியை சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சத்யாவை கைது செய்து அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.