கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் ஆட்டோ டிரைவரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 24-ஆம் தேதி ஜான் தனது ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆட்டோவை உரசுவது போல சென்றனர். மேலும் விபத்து ஏற்படுத்துவது போல அவர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் ஜான் அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர் இரும்பு கம்பியால் ஜானை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த ஜான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.