திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனை தட்டி கேட்ட அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து கிருஷ்ணன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.