நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதமாக வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

புது சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் புதுச்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்து படித்து வேலைவாய்ப்பற்ற  இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து தகுதிக்கு தகுந்தார் போல் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். அதனால் புது சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.