திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தளவாய்புரம் அருந்ததியர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதற்கிடையில் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

அந்த காரில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காருடன் 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய நபர் திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.