திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான குமரன்(38) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரன் நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து லிங்கம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார்.

அதன்படி மருந்தை குடித்து மயங்கி விழுந்த குமரனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.