தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோமதிநாயகம் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கண்டிகைபேரி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோமதிநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதி நாயகத்தின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.