திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.