திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 175 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.