திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் உள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

இதனால் திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட மருந்து ஆய்வாளர் சபரிநாதன் ஆகியோர் மருந்து கடைக்கு சென்று ஆய்வு நடத்திய போது சுப்பிரமணி வீரியம் மிகுந்த மருந்துகளை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மருத்துவம் படிக்காமல் அவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனால் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் மருந்து கடையை பூட்டி சீல் வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.