தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை பக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கனகராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.