மேற்கு வங்கத்தில் யானை ஒன்று தண்டவாளத்தில் நடந்து செல்வதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் யானை நடந்து செல்லும் போது ரயில் ஒன்று வருவதை பார்க்கிறது. அப்போது யானை தண்டவாளத்தில் வேகமாக நடந்து வந்து சத்தம் போடுகிறது.

சில நொடிகளில் ரயில் நின்ற பிறகு யானையும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி காட்டுக்குள் மெதுவாக நடந்து சென்றது. இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்பா என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.