51 கிலோ மீட்டர் நீளமும்,  21 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு செவ்வக நிலப்பரப்பு தான் காசா பகுதி. இஸ்ரேல் உடைய கிழக்கு கடற்கரை ஓரத்தில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள இந்த பகுதியில் உணவு, குடிநீர், மின்சாரம் ஆகிய மூன்றையும் இஸ்ரேல் அரசுதான் இவ்வளவு நாட்கள்  செய்து வந்தார்கள். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள ராமெட்டிரியலை கொண்டு தான் உணவு, குடிநீர், மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது.

காசா நகரத்தில் 2 மின் உற்பத்தி நிலையம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு அனல் மின் நிலையமும்,  ஒரு பெட்ரோல் மூலம் இயங்கும் மின் நிலையமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அனல் மின் நிலையம் போர்த் தொடங்கிய நாளன்றே நிறுத்தப்பட்ட நிலையில்,  இன்று பெட்ரோல் மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையமும் முழுமையாக எரிபொருள் தீர்ந்ததன் நிறுத்தப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி இல்லாமல் காசா நகரத்தில் இருக்கும் 18 லட்சம் மக்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் இருப்பதன் காரணமாக,  மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற முடியாமல் நோயாளிகள் பரிதவித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மருத்துவருக்கு தேவையான அனைத்து விதமான தரவுகள்,  அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும், சிகிச்சை கொடுப்பதற்கும் மின்சாரம் ஒரு அத்தியாவசியம் என்பதன் காரணமாக தற்போது நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலஸ்தீனம் நேரடியாகவே உலக நாடுகள் இந்த போரை நிறுத்த வேண்டும். இது மிகவும் மோசமாகி வருவதாக கூறியுள்ளது. 2.6 லட்சம் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். காசா பகுதியில் உள்ள மக்கள் தொகையில் 10% மட்டுமே அகதிகளாக வெளியேறப்பட்டுள்ள நிலையில் 90% மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.