கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சையது அபுதாகிர் என்பவர் ஒட்டி வந்த கார் மணிகண்டன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.