ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய 3-வாது தெருவில் டிரைவரான தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெப்பம் அதிகமாக இருந்ததால் தமிழரசு வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்க சென்றுள்ளார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்களும் துணிகளும் சிதறி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் மர்ம நபர்கள் கதவை திறந்து 11 பவுன் தங்க நகை, 70 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தமிழரசு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.