கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நள்ளிரவு காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட காரில் வந்த 5 பேர் ராஜேஷ் வந்த காரை நிறுத்தி கன்னியாகுமரி செல்ல வழி கேட்டனர்.

மேலும் 2000 ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது ராஜேஷ் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் 5 பேரும் காளி மது பாட்டில் காண்பித்து கணவன் மனைவியை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து ராஜேஷ் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.