திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகன் முத்துசாமி தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணமாகி விட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முத்துசாமிக்கும், சுப்பையாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த முத்துசாமி தனது தந்தையின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சுப்பையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.