புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார். இதனையடுத்து அன்பழகனை கலெக்டர் தனது  காரில் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்து கௌரவித்தார். பின்னர் கலெக்டர் கவிதா ராமு அன்பழகனின் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி விருந்தில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு பொதுமக்களிடம் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.